வெள்ளி, 17 செப்டம்பர், 2010

நாகபூசணி அம்பாள் துதி




எனக்கென்றோர் தனிவரம் யான் கேட்கவில்லை

என்இனத்தார் வாழ்வொன்றே கருதவில்லை

உனக் கெல்லா உயிர்களுமே சொந்தமென்ற

உண்மையை நான் ஒருபோதும் மறந்ததில்லை

சினங்கொண்டு தீங்கிழைக்கும் தீயர் தாமும்

சீலமுறவேண்டுமென்றே வேண்டுகின்றேன்

தனக்கொருவ ரொப்பில்லாத் தாயே ! இந்தத்

தரணியில் சாந்தியையே தருவாய் நீயே