ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

பகுத்து அறிதல்



ஐம்புலன் - ஊறு , சுவை ,ஒளி , ஓசை , நாற்றம்

ஐம்பூதம் - நிலம் , நீர் , தீ , காற்று , ஆகாயம்

ஐம்பொறி - மெய் , வாய் , கண் , மூக்கு , செவி

அட்டாவதானி - ஒரே சமயத்தில் எட்டு விடையங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன்.


தசாவதானி - பத்து விடையங்களை ஒரே நேரத்தில் அவதானிக்கும் ஆற்றல் உள்ளவன்.

சதாவதானி - ஒரேநேரத்தில் நூறு விடையங்களை அவதானிக்கும் ஆற்றல் உடையவன்.

தசாப்தம் - பத்து ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதி.


ஜெயந்தி விழா - வருடம்தோறும் ஒருவர் பிறந்த நாளன்று எடுக்கப்படும் விழா.

வெள்ளி விழா - இருபத்தைந்தாவது ஆண்டு இறுதியில் எடுக்கப்படும் விழா.

பொன் விழா - ஐம்பதாவது ஆண்டு முடிவிலே எடுக்கும் விழா.

மணி விழா - அறுபதாம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்படும் விழா.

பவள விழா - எழுபத்தைந்து ஆண்டுகள் முடிவடையும் போது எடுக்கப்படும் விழா.


மெய்க்கீர்த்தி


கல்லிலேனும் செப்பேட்டிலேனும் பொறிக்கப்படும் ஒருவருடைய புகழ் .

நடுகல் - போரில் வீர மரணம் எய்திய போர் வீரனின் பெயரையும் புகழையும் எழுதி நாட்டப்படும் கல்.