செவ்வாய், 17 ஜூலை, 2012

உலகையே திரும்பி பார்க்க வைத்த தெரு சிறுவர்கள்! (வீடியோ)

இன்று உலக பொருளாதார நிபுனர்களையே ஆச்சர்யத்துடன் திரும்பிப்பார்க்க வைத்துள்ளனர் இந்தியாவில் டெல்லியை சேர்ந்த வீடற்ற வீதி சிறுவர்கள்.   பாடசாலைக்கு கூட செல்ல முடியாது வறுமை காரணமாக சிறுவயதிலேயே தொழிலுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட இச் சிறுவர்கள், தமக்குள்ளே ”கயானா” என்ற அமைப்பை ஸ்தாபித்து அதனை வங்கியாக விஸ்தரித்துள்ளனர்.   இவ் வங்கியில் முகாமையளரில் இருந்து, அலுவலகர், வாடிக்கையாளர் என தெரு சிறுவர்களே காணப்படுகிறார்கள்.தாம் அன்றாடம் உழைக்கும் பணத்தை முறைப்படி இவ் வங்கியில் சேர்த்து, அவ் வங்கி மூலம் பல சேவைகளை வழங்குகிறார்கள்.   இவ் வங்கியை தெற்காசியா முழுவதும் விஸ்தரிப்பதே தமது நோக்கம் என்று இவ் வங்கி முகாமையாளராக பணிபுரியும் சிறுவன் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பான முழுமையான ஆவணப்படத்தை கீழே வீடியோவில் பார்க்கலாம்.


 நன்றி சிறுப்பிட்டி இணையம்.